வியாழன், 1 செப்டம்பர், 2016

கொடுத்தல்

இருப்பதால் கொடுக்கிறான்
ஒருவன்
இயன்றதை கொடுக்கிறான்
ஒருவன்

கொடுத்தல் என்பது
நிகழத்தான் செய்கிறது
மனிதர்களாலும்
மனிதர்களை போன்றோராலும்

அடிபட்ட இடத்தில்
அலட்சியம் செய்தவன்
அன்பளிப்பு செய்கிறான்
ஆஸ்பத்திரிக்கு

தீராப்பசியில்
தின்றுகொண்டிருந்தவன்
அருகில் வந்த நாய்க்கும்
அமரவைத்து சோறு போட்டான்